Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Paravai Thantha Parisu
Paravai Thantha Parisu
Paravai Thantha Parisu
Ebook80 pages22 minutes

Paravai Thantha Parisu

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

பறவை தந்த பரிசு - நாரா. நாச்சியப்பன்


சிறுவர்களுக்காகக் கதை எழுதும் போது, எழுத்தாளர்கள் மனத்தில் கொள்ள வேண்டிய ஒன்று உண்டு, கதைகள், வெறும் நிகழ்ச்சிக் கோவையாக இல்லாமல், கற்பனை ஆக்கமாக இருத்தல் வேண்டும்.


குழந்தைகளின் பெரும் பொழுது கற்பனைக் காட்சிகளிலேயே கழிகிறது. அந்தக் கற்பனைகள் சூழலையை யொட்டி நல்லவையாகவும் அமை

Languageதமிழ்
Release dateJul 12, 2024
ISBN9788197717772
Paravai Thantha Parisu

Read more from Nara Nachiappan

Related to Paravai Thantha Parisu

Related ebooks

Reviews for Paravai Thantha Parisu

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Paravai Thantha Parisu - Nara Nachiappan

    பறவை தந்த பரிசு

    நாரா. நாச்சியப்பன்

    Title: Paravai Thantha Parisu

    Author: Nara. Nachiappan

    Language: Tamil

    First Published on: 1982

    Year of Publication: 2024

    Book Format: Paperback

    Page Size: 6inch * 9inch

    Category: Fiction

    Subject: Children Stories Collection

    ISBN: 978-81-977177-7-2

    Published by: Nilan Publishers, Madurai, Tamilnadu, India

    Copyright © Nilan Publishers, 2024

    பொருளடக்கம்

    பதிப்புரை

    நான்கு குருவிகள்

    தவிட்டுக்கு வாங்கிய பிள்ளை

    புற்கள் அடித்த தம்பட்டம்

    புகழ் பெற்ற வள்ளல்

    பறவை தந்த பரிசு

    பதிப்புரை

    சிறுவர்களுக்காகக் கதை எழுதும் போது, எழுத்தாளர்கள் மனத்தில் கொள்ள வேண்டிய ஒன்று உண்டு, கதைகள், வெறும் நிகழ்ச்சிக் கோவையாக இல்லாமல், கற்பனை ஆக்கமாக இருத்தல் வேண்டும்.

    குழந்தைகளின் பெரும் பொழுது கற்பனைக் காட்சிகளிலேயே கழிகிறது. அந்தக் கற்பனைகள் சூழலையை யொட்டி நல்லவையாகவும் அமையலாம்; அல்லாதவையாகவும் தோன்றலாம். நூலாசிரியர்கள் தம் படைப்புகளில் நல்ல கற்பனைகளைப் படைப்பதன் மூலம், எதிர்காலச் சிற்பிகளை உயர் நோக்கம் உள்ளவர்களாக்க உதவ முடியும். அன்புடைமை, பண்புடைமை, ஊக்கமுடைமை ஆக்கமுடைமை, அறிவுடைமை, திறனுடைமை என்ற இன்னோரன்ன ஆற்றல்களைப் பிஞ்சு நெஞ்சுகளில் தோன்றச் செய்தல் வேண்டும்.

    உயர்ந்த கற்பனைத் திறத்துடன் : சிறந்த கதைகளைப் படைத்து வரும் கவிஞர் நாரா. நாச்சியப்பன் அவர்கள் எழுதிய ஐந்து சிறந்த கதைகள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. படித்த நெஞ்சில் படியும்படியான கதைகள். நல்லவை என்று போற்றும்படியான கதைகள். ஆவலை வளர்த்து அறிவைப் பெருக்கும் சித்திரக் கதைகள். இவை உங்கள் செல்லக் குழந்தைகளுக்கு ஏற்ற கதைகள்.

    -தமிழாலயம்

    நான்கு குருவிகள்

    ஒரு காட்டில் சிட்டுக் குருவி ஒன்று இருந்தது. சின்னம் சின்னமாய் அதற்கு நான்கு குஞ்சுகள் இருந்தன.

    ஒரு நாள் சிட்டுக் குருவி, தன் குஞ்சுகளுக்குச் சோறு ஊட்டிக் கொண்டிருந்தது. அப்போது அந்தக் குஞ்சுகளில் ஒன்று, அம்மா, அம்மா என்னால் வெயிலைத் தாங்க முடியவில்லை என்றது.

    உடனே மற்றொரு குஞ்சு, அம்மா அன்று ஒரு நாள் மழை பெய்த போது நான் தெப்பமாய் நனைந்து விட்டேன் என்றது.

    நேற்று இரவு பணியில் படுத்திருந்ததால் எனக்குத் தடிமன் பிடித்துக் கொண்டது என்றது மூன்றாவது குஞ்சு.

    இவற்றையெல்லாம் கேட்டதும் சிட்டுக் குருவிக்குக் கவலை வந்து விட்டது. குஞ்சுகள் உடல் நலமாய் இருக்க என்ன செய்யலாம் என்று அது நினைத்துப் பார்த்தது.

    கவலையோடு அது சிந்தித்துக் கொண்டிருப்பதைக் கண்ட நான்காவது குஞ்சு, அம்மா, எங்களுக்கு ஒரு வீடு கட்டித் தா அம்மா! என்று கூறியது.

    இதைக் கேட்டதும் அந்தச் சிட்டுக் குருவிக்கு மகிழ்ச்சி உண்டாயிற்று. ஒரு சின்ன வீடு கட்டிவிட்டால்

    Enjoying the preview?
    Page 1 of 1